Tuesday, December 9, 2008

கல்வி உதவி

இனிய தோழர்/தோழிகளே,

"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை"

என்பதற்க்கு இலக்கணம் போல நண்பர் ஆனந்த் பொன்னுசாமி உள்ளார்.

இவர் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திவரும் DRCET அமைப்பு, ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி புரிந்து வருகிறது.





இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்


உலகத்திலேயே சிறந்த புண்ணியம் இது என்கிறார் பாரதியார்.

உங்களால் முடிந்த பங்களிப்பை தாருங்கள்.


நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப் பெருந் தொழில் நாட்டுவம் நாரீர்!

Contact:
P.Ananth Prasath - Email : ananthprasath@drcet.org Phone : +91-97313 22008
M.Krishna Priya - Email :
priyarajeswari@gmail.com Phone: +91-98809 60332
http://www.drcet.org/
நன்றி திரு.சதீஸ் அவர்களுக்கு.

Saturday, November 15, 2008

தீராநதி மற்றும் கோவை ஓசை - ஒரு நேர்காணல்

கோவையில் செயல்பட்டுவரும் '' ஓசை'' அமைப்பு வனங்கள் மற்றும் வன உயிர்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு தன்னார்வ நிறுவனமாகும்.இவர்கள் வருடந்தோறும் நடத்தும் ''கானுயிர் புகைப்படக் கண்காட்சி '' நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.http://maravalam.blogspot.com/2008_09_01_archive.html

தீராநதி இதழில் திரு.காளிதாஸ் ( ஓசை ) அவர்களது பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

கேள்வி:மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய உங்களது பார்வை ?





உலகில் உயர்ந்த மலை எனக்கேட்டால் இமயமலை எனக்கூறுகிறோம்.ஆனால் இமயமலையை விட சில லட்சம் ஆண்டுகள் முன்பே மேற்குத் தொடர்ச்சி மலை தோன்றி இருக்கும் என மண்ணியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சோலைக்காடுகளில் படிந்திருக்கக் கூடிய மேல் மண்,அங்கிருக்கின்ற இலை,தழைகளால் உருவாகின்ற மண்.இந்த சோலைக்காடுகளைத்தான் வள்ளுவர் '' அணி நிழற்காடு '' எனக்கூறி இருப்பார் என்று தோன்றுகிறது.சோலைக்காடுகள் உயர்ந்து வளராவிட்டாலும் அடர்ந்து வளரும்.சூரியஒளி உள்ளே புகாது. அந்த சூரிய ஒளி உள்ளே புகாத இருட்டு பகுதியில் இலைதலைகள் கீழே விழுந்து பறவை,விலங்குகளின் கழிவுகள் கலந்து நுண்ணுயிர்களால் மாற்றம் செய்யப்பட்டு அந்த மண் உருவாகின்றது.

ஒரு அரை இன்ச் அந்த மேல்மண் படிவுகள் உருவாகுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்று மண்ணியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.ஆனால்மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளில் அடுக்கடுக்கான அந்த மண்படிவுகள் இருக்கின்றன.அவை அந்தக் காட்டின் பழமையைக் குறிக்கின்றன.இவை உணர்த்துகின்ற இன்னொரு உண்மை,இந்தக் காட்டை நம்மால் உருவாக்க முடியாது என்பதுதான்.காடு வளர்ப்பு பணிகள் என்று பலவற்றை நாம் செய்யலாம்.வெறும் மரங்கள் மட்டுமே காடுகள் ஆகிவிட முடியாது.சோலைக்காடுகள் என்பது அங்குள்ள நுண்ணுயிர்,பறவைகள்,விலங்குகள்,தாவரங்கள் மற்றும் பல வளமைகளை உள்ளடக்கியது.இதை நம்மால் உருவாக்க முடியாது,ஆனால் காப்பாற்றமுடியும். ( தொடரும் )












Sunday, November 2, 2008

கிராமக் குழந்தைகள் நூலகம்




நூலகங்கள் காலத்தின் போக்கில் கடக்கும் விசயங்களை, சேகரிக்கும் செய்திகள், நூல்களை நாளை வரப்போகும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கை சூழலினை தரப்போகும் முக்கிய அம்சம்!எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு தீர்வுகளை கண்டுகொண்டிருந்தாலும், இந்த பணி ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மிகச்சரியானதொரு பணியாக,இவர்கள் முன்நின்று செய்யும் இந்த அடையாளம் - அரும்புகள் வாசிப்பு இயக்கம் கோவை வாழ் எளிய மக்களின் பிள்ளைகள், சிறுவர் சிறுமியர்களின் புத்தகங்கள் மீதான ஆர்வம் - அடையாளம் எனும் அமைப்பால் தரப்பட்டிருக்கிறது!ஆம்!எதிர்காலத்தில் சமூகத்தில் நல்லதொரு அடையாளம் தரும் சிறந்த மனிதர்களை உருவாக்கும் பணியாக....!இவர்களின் சிறு கோரிக்கையாக மலர்ந்திருப்பது உங்களால் முடிந்த அளவு நூல்களை தாருங்கள், புத்தகங்களை கொடுத்து இளைய தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு இயன்றளவு உதவுங்கள் என்பதுதான்!இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உதவிகள் சிறிதாக இருந்தாலும் கூட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் மாபெரும் நற்பணி!



கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும்வழியில் காரமடை எனும் ஊரில் உள்ளது அடையாளம் எனும் அமைப்பு.தன்னார்வத்தோடு செயல்படும் பலரது முயற்சியால் பெரியநாய்க்கன் பாளையம் எனும் பகுதியில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த 1400 குழந்தைகள் அவர்களே நிர்வகிக்கும் நூலகமாக


ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த அமைப்பின் சிறப்பம்சம் பணமாக வரும் உதவிகளை ஏற்பதில்லை என்பதுதான்.அதற்கு பதிலாக நூல்நிலையங்களுக்கு பணத்தை அனுப்பச்சொல்லி அங்கிருந்து தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.


அவர்களது தொடர்பு முகவரி


திரு.தண்டபாணி. அலைபேசிஎண் 98423 51324


திருமதி.அம்சவேணி. அலைபேசிஎண் 98421 51323


முகவரி


அடையாளம் அமைப்பு


2 / 563,பெத்தட்டாபுரம்,


காரமடை அஞ்சல்


கோயம்புத்தூர் 641 104.

நன்றி திரு.ஆயில்யன் அவர்களுக்கு.




Wednesday, October 15, 2008

கோவையில் உபுண்டு திட்டம்.

சென்னையிலிருந்து திரு.ராமதாஸ் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மின்மடலை அனைவரின் பார்வைக்கு வைக்கிறேன்.
''வணக்கம்
உபுண்டுவின் அடுத்த வெளியீடு இந்திரிபிட் ஐபக்ஸ் வெளிவர இன்னும் பதினாறுநாட்களே உள்ளன. முந்தைய வெளியீடுகளின் போது எளிய வெளியீட்டு நிகழச்சிகளைநடத்தியது போலவே இம்முறையும் வெளியீட்டு நிகழ்ச்சியொன்றை உபுண்டு தமிழ்குழுமம் நடத்த உள்ளது. நவம்பர் ஒன்று அதற்குரிய நாளாக கருதுகிறோம்.
சிறிய மாற்றமாக எப்போதும் சென்னையிலேயே இதனைச் செய்து வந்த நாங்கள்இம்முறை சென்னையைத் தாண்டி கொண்டாட வேண்டும் எனக் கருதுகிறோம். தாங்கள்வசிக்கும் ஊரில் இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இயலுமாயின் அதனைவரவேற்கிறோம்.
நவம்பர் 01, 02 சனி ஞாயிறாக இருப்பதால் உபுண்டுவை மக்களுக்கு/மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் இது அமையலாம். உபுண்டுநிறுவும் முறை, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் தமிழ்,உபுண்டுவில் பாடல் கேட்பது எனப் பலவற்றையும் செய்முறையாக விளக்கிக்காட்டலாம்... தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகள்/ கல்விக் கூடங்களில்இதற்கான ஏற்பாட்டை செய்ய இயலுமாயின் மகிழ்ச்சி. உபுண்டு ஆசான்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியாகவும் இது அமையலாம்.
எங்கள் குழுமத்திலுருந்து இருவர் உங்களை நாடி உபுண்டுவுடன் வருவோம்.தங்களால் தங்களூரில் ஒருங்கிணைத்து உதவ முடியுமா? மூன்று... ஐந்துகணினிகள்... பத்து.. இருபது.. எவ்வளவு பேர் இருந்தாலும் சரி.. மென்விடுதலை வேட்கை இருந்தால் போதும்... எமது முகவரிக்கு விரைந்து மடல்அனுப்பவும். இச்செய்தியை பிறருக்கும் தெரியப்படுத்தி உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.''
தங்களது ஆலோசனைகளை எனது மின்மடலுக்கு velarasi@gmail.com வரவேற்கிறேன்.

Thursday, October 9, 2008

சியாட்டில் வாழ் தமிழர்களுக்கு



எனது முந்தைய பதிவில் எழுதியுள்ள பத்மஸ்ரீ.கிருஷ்ணம்மாள் அவர்கள் சியாட்டில் பல்கலைக்கழகம் வழங்கும் ஓபஸ் விருதினைப் பெறுவதற்காக இந்த மாத நடுவில் அமெரிக்கா வருகிறார்.பாஸ்டன்,பிலடெல்பியா,வாஷிங்டன்,சான்டியாகோ,சான்பிரான்ஸ்கோ

பகுதிகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நவம்பர்மாதம் 18ஆம் தேதியன்று ஓபஸ் விருதினைப் பெறுகிறார்.

இரண்டு விருதுகளைப் பெறும் இந்தப் பெறுந்தகை விருதுத்தொகையான சுமார் ரூபாய் எழுபதுலட்சத்தை வீடற்ற,நிலமற்ற நபர்களுக்காக செலவிட உள்ளார்.

இவரது பயணவிவரம் அறியhttp://www.shantinik.blogspot.com/

மாற்று நோபல் பரிசு பெறும் தமிழ்அன்னை

லாப்டி-உழுபவர்க்கே நிலம் சொந்தம்.



ஸ்வீடன் நாட்டிலிருந்து வழங்கப்படும் ரைட்லைவ்லிஹூட் விருது தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவழியை பின்பற்றும் கிருஷ்ணம்மாள்ஜெகநாதன் அவர்களுக்கு,அவரது லாப்டி அமைப்பின் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.தம்பதியரது பணிகளை,தியாகத்தைப் பற்றி முன்பே மூன்று பதிவுகள் எழுதியுள்ளேன்.மேலும் இவரது பணியிணைப் பற்றி அறியhttp://www.lafti.net/



Saturday, September 6, 2008

தமிழர் நாகரிகச் செழுமை

தமிழர்தம் நாகரிகம் எவ்வளவு மேன்மையுற்று இருந்தது என்பதை ஆன்மீக இலக்கியங்களை எந்த விருப்புவெறுப்பும் இல்லாமல் படித்தோமானால் தெரிந்து கொள்ளமுடியும்.சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர் என்ற சிவபக்தர் கதை ஒன்று வருகிறது.அதில் ஒரு பாடல்.


பரிசு விளங்கப் பரிகலமும்


திருத்திப் பாவாடையில் ஏற்றித்


தெரியும் வண்ணம் செஞ்சாலிச்


செழும்போ னகமும் கறியமுதும்


வரிசை யினில்முன் படைத்தெடுத்து


மன்னும் பரிக லக்கால்மேல்


விரிவெண் துகிலின் மிசைவைக்க


விமலர் பார்த்துஅங்கு அருள்செய்வார்


பரிசு -இயல்பு, பரிகலம் - உண்கலம், பாவாடை - பரப்பிய ஆடை, சாலிச்செழும்போனகம் - சம்பா அரிசிச்சோறு, பரிகலக்கால் - முக்காலி போன்று அமைந்துள்ள உணவு வைத்து உண்ணும் ஆசனம்.


நல்லியல்பின் விளங்க உண்கலத்தை விளக்கி அதனை ஒரு பரப்பிய துணியின் மீது வைத்து அமுதவகைகள் நன்கு தெரியும்படி செழுமையான சாலிநெல்லரிசிச்சோறும் கறிவகைகளும் வரிசையாகப் படைத்துச் சிறப்பின்மிக்க அப்பரிகலத்தை நிலையான முக்காலியின் மீது வெண்துகில் பரப்பி அதன்மீது வைக்க ஆங்கு அடியவர் அவற்றைக்கண்டு உரைக்கலானார்.


சேக்கிழாரின் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது.அப்போதே டைனிங்டேபிளின் மேல் துணியை விரித்து உணவு பரிமாறும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதிலிருந்து தமிழர் நாகரீகம் எவ்வளவு செழுமையானது என்பதை அறியமுடிகிறது.

Friday, September 5, 2008

கல்வெட்டுகள் - வரலாற்றின் படிக்கட்டுகள்

வரலாறு என்பது ஊகத்தின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல.அசைக்கமுடியாத அடிப்படை சான்றுகளை கொண்டு எழுதப்படுவது.அந்த அடிப்படை ஆதாரங்களே கல்வெட்டுகள்.

கி.பி.1000த்தில் தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன் என்பதை நாம் கல்வெட்டுகள் மூலமாகத்தான் அறிந்தோம்.இதுபோல் தமிழகத்தில் பல்லாயிரம் ஊர்களின் வரலாற்றை கல்வெட்டுகள் வாயிலாகத்தான் அறிந்தோம்.

லண்டனில் நடைபெற்ற பத்தூர்கோவில் நடராஜர் சிலைவழக்கில் நீதிபதி , கல்வெட்டு நிபுணர் திரு.நாகசாமி அவர்களிடம் புத்தூர் கோவிலின் காலம் என்ன? தமிழ்நாட்டு சிலைகளின் காலத்தை எவ்வாறு கணிக்கிறீர்கள்? அவை உண்மையான சான்றுகள் என எவ்வாறு நிரூபிப்பீர்கள்? என கேள்வி கேட்டார்.

அப்போது பத்தூர் கோவிலின் கல்வெட்டுகளை எடுத்துக்கூறி சிலைகளின் காலத்தைக்கணிக்கும் கல்வெட்டுகளின் தன்மையையும் எடுத்துக்கூறினார்.அந்த சான்றுகளைப் பார்த்துவிட்டு நடராஜர் சிலை கோவிலுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்புக்கூறினார்.

இப்போது படிக்க இருப்பவையே 40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள்.ஆனால் தொல்லியல்துறையில் கல்வெட்டுநிபுணத்துவம் பெற்றவர்களோ நான்குபேர் மட்டும்தான்.

கடந்த 40 ஆண்டுகளில் திருப்பணிக்காக அழிக்கப்பட்ட கல்வெட்டுகளோ ஏராளம். இன்றைய தலைமுறைக்கு நமது கலை தெரியாது, கட்டிடம் தெரியாது,கல்வெட்டு தெரியாது,வரலாறு தெரியாது.இப்படியிருந்தால் தமிழின் தொன்மையை,தமிழகத்தின் சிறப்பை,கலை மற்றும் கலாச்சாரத்தை,நாகரீகத்தை,பண்பாட்டை உலகத்திற்கு நாம் எவ்வாறு தெரியப்படுத்துவோம்? என வினவுகிறார் கல்வெட்டுநிபுணர் டாக்டர் திரு.ஆர்.நாகசாமி.

Saturday, August 23, 2008

வெகுஜன ஊடகங்கள் மறந்த ஒரு மாமனிதர்

தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.

பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப்போராட்டங்களில் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர்.
திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது ‘முருகா, முருகா’ பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:
1. இசைமணி மஞ்சரி (1970இல்)2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)3. கீர்த்தனை அமுதம் (1974இல்)4. நவமணி இசைமாலை (19880இல்).

தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்!
“தமிழ் கலைக் களஞ்சியம்” என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார்.
பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் ‘பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு’ என்கிற தலைப்பில்!

பத்மபூஷன்,கலைமாமணி என பல கௌரவங்களை பெற்ற இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பிறந்த இவர் தமிழ் கலைக் களஞ்சியம் வெளிவர முக்கிய பங்காற்றியவர்.ஆனால் இவரது நூற்றாண்டை வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கு கொண்டுசெல்லாதது ஏன்? என்பதுதான் புரியவில்லை.

இவரது வாழ்க்கை குறிப்பு பற்றி மேலும் அறிய

http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html

நன்றி.திரு.ஜீவா வெங்கட்ராமன் அவர்களுக்கு.

Sunday, August 17, 2008

நான் ரசித்த நிழல்நடனம்



நன்றி திரு.பிரேம்ஜி

Thursday, August 14, 2008

சுதந்திர தினம்

சுதந்திரதினம்-டிவி இல்லாமல்August 13, 2008 – 9:11 pm
நண்பர் கிருஷ்ணன் அனுப்பிய கடிதம் இது. வாசகர் கவனத்துக்காக.
இமையம் யூத் அஸோஷியேஷன் இணைந்த கரங்கள் நற்பணி இயக்கம் இளைய ஆணிகள் பசுமை பாரதம் 18-f, ECM lay out, SKC Road., Erode Ph. 9842771700, 9865916970. அன்புடையீர், நாங்கள் ஈரோட்டை மையமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ சமூகப்பணி இயக்கங்கள். கடந்த நான்கு வருடங்களாக எங்கள் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நாட்களில் தொலைக்காட்சிப்பெட்டிகளை அணைத்துவிடும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறோம். அதேபோல தொலைக்காட்சி நிறுவனங்களிடம் அந்த நாட்களிலாவது உணர்வுகளை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளான திரைநட்சத்திர பேட்டிகள் திரை செய்திகள் போன்றவற்றை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். திரைநட்சத்திரங்கள் திரைப்பணியாளார்கள் போன்றோரிடமும் அந்நாட்களில் பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றை செய்யவேண்டாம் என்றுசொல்லிவருகிறோம்.
இந்த நாட்களிலாவது வெறும் பொழுதுபோக்கை தவிப்பது என்ற பொறுப்பு ஊடகங்களுக்கு தேவை என்பது எங்கள் எண்ணம். பொதுமக்களிடம் இருக்கும் இந்த மேலோட்டமான மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அந்நாட்களை வெறும் விடுமுறைநாட்களாக மட்டுமே காணும் மனநிலையாகும். இந்த நாட்டில் நடந்த விடுதலைப்போராட்ட வரலாற்றை இளையதலைமுறை முழுமையாகவே மறக்கும் நிலைக்கு நாட்டை இது கொண்டுசெல்லும்.
இதை உங்கள் இணையதளங்களில் பிரசுரியுங்கள். உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் இச்செய்தி கூடுமானவரை அதிக மக்களிடம் சென்று சேரட்டும். விடுதலைநாளை பயனுள்ள வழிகளில் செலவழிப்போம். அந்த நாளில் நம் தேசத்துக்காகவும் சமூகத்துக்காகவும் எதையாவது செய்வோம். குறைந்தது நாட்டைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்
அன்புடன்
கிருஷ்ணன்செயலாளர்இமையம்
பிறநிறுவனங்களுக்காகவும் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
கட்டுரை குறித்த கருத்துக்களை jeyamohan.writer@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.

Tuesday, August 5, 2008

பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

இன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மாமன்னன் இராசராசன் பரிசு - 2008 விருதுத்தொகை :ஒரு இலட்சத்து ஒரு ரூபாய் மற்றும் சான்றிதழ்.# புதினம்,கவிதை,நாடகம்,கலையழகு மிளிரும் உரைநடை ஆகியன பரிசுக்குரியன. #01.07.2007 முதல் 30.06.2008 நாளுக்கு முன் வெளியீடானவை.#நூலின் ஆசிரியர் எந்நாட்டவராகவும் அமையலாம்.#எவர் வேண்டுமானாலும்,குறித்த பரிந்துரைப்படிவங்களில் தங்கள் முன்மொழிவை அனுப்பிவைக்கலாம்.படிவங்களைப் பதிவாளர்,தமிழ்ப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்-613 010 என்ற முகவரிக்கு ரூ 10 அஞ்சல் தலை ஒட்டிய தன்முகவரி உறை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.#படிவம் கிடைக்காவிடில் பரிந்துரையாளரின் முகவரி,பரிந்துரைத்த ஆசிரியரின் முகவரி,இலக்கிய வாழ்வுப்பணி பற்றிய குறிப்பு,நூற்பெயர்,நூற்சிறப்பு,இலக்கிய உலகில் நூலின் தகவு,பிற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாயின் அதன் விவரம்,ஆசிரியரின் பிறநால்கள் முதலிய சிறப்புச்செய்திகளைக் குறிப்பிட்டுப் பரிந்துரைக்கலாம்.# பரிந்துரை அனுப்பும் நிறை நாள் : 17.9.2008. எனவே நண்பர்கள் அனைவருக்கும் இத்தகவலை பரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, August 2, 2008

தீரன் சின்னமலை

இன்று ஆடிப்பெருக்கு.நதிகளில் வெள்ளம் 18 படிகளை தொட்டுச்செல்லும் நாள்.இந்த நாளில் நினைவுகூறப்படுவர் தீரன் சின்னமலை.ஆங்கிலேயர்கள் கொங்குநாட்டில் காலூன்றி வரிப்பணம் வசூல்செய்து கொண்டுசெல்லும்போது எங்கள் பணத்தை உனக்கு எதற்கு கொடுக்கவேண்டும் ? என வசூல்செய்த அனைத்தையும் பறிமுதல் செய்தார்.உயரதிகாரிகள் கேட்டால் என்ன சொல்வது? என வரிவசூல் செய்தவர் கேட்டபோது '' சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் உள்ள சின்னமலை பிடுங்கிக்கொண்டான் என்று போய்ச்சொல் '' என்று அனுப்பிவைத்தார். 1801 ன்றாம் ஆண்டு தொடங்கி இவர் நடத்திய மூன்று போர்கள் ஆங்கிலேயர்களால் மறக்கமுடியாதவை.மருது சகோதரர்களுடன் நட்புகொண்டிருந்தார்.குறுநிலமன்னர்கள் படைகளை வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களுடன் போராடியபோது இவர் முதன்முதலாக மக்களையும் வெள்ளையர்களுக்கு எதிராக போராடவைத்தார்.இவரது கொரில்லா போர்முறையை தாக்குபிடிக்கமுடியாத கிழக்கிந்திய கம்பெனி தந்திரமாக இவரது சமையல்காரனை விலைக்குவாங்கி எந்தநேரமும் ஆயுதத்தோடு இருப்பவரை உணவு உண்ணும்போது நிராயுதபாணியாக இருக்குமாறு செய்து அதன்பின் கைதுசெய்தது.அடிபணிந்து போகமாட்டேன் என்று கூறியதால் ஒரு ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று சங்ககிரி கோட்டையில் வெள்ளையர்களால் வீரமரணம் அடைந்தார்.

குறிப்பு: இவரது சிலை கிண்டியில் உள்ளது.

Tuesday, July 29, 2008

பாடம் கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்

நாட்டில் கலவரம் நடந்துகொண்டிருக்கும் இந்தவேளையில் நாம் குழந்தைகள் மூலம் பாடம் கற்றுக்கொள்வோமாக.

Friday, July 11, 2008

கற்கை நன்றே கற்கை நன்றே

கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி திரு.லோகநாதன்.இவர் காலையில் இருந்து மதியம் 1 மணி வரை ஒரு பட்டறையில் வெல்டிங் மற்றும் கேஸ்கட்டிங் வேலைகளை செய்கிறார்.பின்பு மதியஉணவு நேரமான 1 மணி முதல் 2 மணி வரைஉள்ள நேரத்தில் 15 நிமிடத்தில் உணவு அருந்திவிட்டு மீதமுள்ள 45 நிமிடங்களில் அருகிலுள்ள வீடுகள்,நிறுவனங்களில் கழிவறை சுத்தம் செய்யும் வேலையை செய்கிறார்.அதன்பின் மதியம் 2 மணிமுதல் 6 மணிவரை வெல்டிங் வேலையை முடித்தபின் மாலை 6 மணிக்கு மேல் பல வீடுகளுக்கு சென்று கழிவறையை சுத்தம் செய்கிறார்.வெல்டிங்வேலையில் மாதம் ஆறாயிரம் வரை சம்பளம் வாங்கும் இவர் அதனை குடும்பத்திற்க்கு கொடுத்துவிட்டு கழிவரையை சுத்தம் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தை சேமித்துவைக்கிறார்.

சமீபத்தில் இவர் தனது சேமிப்பில் இருந்த பணம் ரூபாய் ஐந்தாயிரத்தை பெற்றோரை இழந்து அரசு காப்பகத்தில் தங்கிப்படிக்கும் ஆதரவற்ற மாணவியர்க்கு புத்தகங்கள் வாங்க உதவியிருக்கிறார்.

இவரை பற்றிக் கேள்விப்பட்டதும் ஞாபகம் வந்த பாடல்

ஈன்று புறம்தருதல் என்தலைக்கடனே அவனை

சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே

இவர் தந்தையுமானவர்

Thursday, July 10, 2008

கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு

திரு.மஞ்சூர் ராசா அவர்களது முயற்சியால் கோவையில் வலைபதிவர் சந்திப்பு வரும் ஜூலை 13ஆம்தேதி ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.வரும் அன்பர்களது எண்ணிக்கையை பொருத்து இடத்தை முடிவுசெய்யலாம் எண்ணியுள்ளனர்.எனவே கோவையை சுற்றியுள்ள அன்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு
திரு.மஞ்சூர்ராசா 94424 61246
திரு.ஓசைசெல்லா 99946 22423
திரு.சஞ்சய் 98428 77208

Saturday, June 21, 2008

M.S .உதயமூர்த்தி

1990 களில் இளைஞர்களாக இருந்தவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் உதயமூர்த்தி அவர்கள்.தன்னம்பிக்கை பற்றிய அவரது புத்தகங்கள் அனைவரும் படிக்கவேண்டியவை.எம்.ஜி.ஆர்,கலைஞர் இருவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தாலும் அதைவைத்து தனக்கென ஆதாயம் தேடிக்கொண்டதில்லை.1988 ல் இவரால் துவங்கப்பட்ட '' மக்கள் சக்தி இயக்கம் '' நதிகள் இணைப்பை வலியுறுத்தி 1991 ல் நடத்திய நடைபயணம் வரலாறு அறிந்த விஷயம்.

அவரது கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் இளைஞர் குழு ஒன்று மக்கள் சக்தி இயக்கத்தையும்,மாத இதழான '' நம்பு தம்பி நம்மால் முடியும் '' புத்தகத்தையும் புதிய பொலிவுடன் கிராமங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

இவர்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்க விரும்புவோர் அணுக முகவரி;

மக்கள் சக்தி இயக்கம்,திருவான்மியூர்,சென்னை.

044-24421810.www.makkalsakthi.org

Wednesday, June 11, 2008

பசுமை மனிதன்

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எர்த் மேட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு சுற்றுசூழலுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும் '' சுற்றுச்சூழல் போராளி '' ( Eco Warrior ) எனும் விருதினை வழங்கிவருகிறது.

கோவையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் யோகநாதன்.பள்ளியில் படிக்கும் பொழுது இயற்கையை ரசிக்க ஆரம்பித்த இவர் 1980ஆம் ஆண்டு முதல் மரங்களை நடும்பணியை துவக்கி இதுவரை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை செய்துள்ளார்.

பள்ளி மாணவ மாணவியரிடம் சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இதுவரை 1687 பள்ளிகளில் '' ஸ்லைடு ஷோ '' நடத்தியுள்ளார்.மரம் வளர்வது எப்படி?காற்றும் தண்ணீரும் உருவாகும் முறை , அசுத்தக் காற்றை மரங்கள் தூய்மைப்படுத்தும் விதம் போன்றவை விஞ்ஞானபூர்வமாக இந்தகாட்சியில் விளக்கப்படுகின்றன.

இதன் பயனாக 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.மேலும் இவரது பேருந்தில் பயணம் செய்யும் மாணவ மாணவியரை பசுமை நேசிப்பாளராக மனம் மாற்றியுள்ளார்.

எனவே இவரது சேவையை பாராட்டி எர்த் மேட்டர்ஸ் அமைப்பு கடந்த 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்திய துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி அவர்கள்மூலம் எக்கோவாரியர் விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 நபர்களில் கண்டக்டர் யோகநாதன் வரிசையில் இந்திநடிகர்,பிரபல மாடலிங் ஜான்ஆபிரஹாமும் ஒருவர்.

Thursday, May 29, 2008

சிவில் சர்வீஸ் தேர்வுகள்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சைதை.துரைசாமி அவர்கள் நடத்தும் மனிதநேயப்பேரவை சிவில்சர்வீஸ் எழுதவிரும்பும் மாணவர்களுக்கு இலவசப்பயிற்சி அளிக்கவுள்ளது. 8 மாதம் நடக்கவுள்ள இந்த முகாமிற்கு தேர்ந்தெடுக்கபடும் நபர்களுக்கு உணவு,உறைவிடம்,பயிற்சிநூல்கள்,சீருடை,பயணசெலவுகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன.கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது கூடுதல் செய்தி.ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வோமாக.மேலும் விபரம் அறிய www.manidhanaeyam.com செல்க.

Wednesday, April 23, 2008

இதய நோய்க்கு தமிழர்களின் மருந்து

இதய நோயினாலும் மாரடைப்பு ஏற்பட்டு ரத்தம் திடீர் என்று உறைவதாலும் பலர் திடீர் என மரணத்தை தழுவுகிறார்கள்.இந்த விபரீதத்தை தடுக்கும் அதிஅற்புத மருந்து ஹெபாரின் என்பது.இந்த மருந்து உயர்ரக விலங்குகளின் சிறுகுடல்,நுரையீரலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இதன்மூலம் கிடைக்கும் மருந்தின் அளவு மிகக்குறைவானது என்பதால் அதன்விலையும் மிக அதிகமாகவே உள்ளது. 1 மில்லிகிராம் ஹெபாரின் விலை ரூ 7,600 ல் இருந்து 33 ஆயிரம் வரை தரத்துக்கு ஏற்ப உள்ளது.


ஒரு கிராம் தங்கத்தின் விலைகூட ரூபாய் 1,100 தான்.ஆனால் ஒரு கிராம் ஹெபாரின் விலை உத்தேசமாக இரண்டரைலட்சம் ஆகும்.


மனிதனின் மகத்தான உயிரை மாரடைப்பு காலங்களில் காப்பாற்றக்கூடிய இந்த மருந்தை அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்உயிரியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 10 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்து கடற்கரையில் கிடைக்கும் சிப்பிகளில் இருந்து தயாரிக்கமுடியும் என கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


திறந்த இருதய அறுவைசிகிச்சை,இதய வால்வு மாற்று சிகிச்சை மற்றும் மாரடைப்பு காலங்களில் ரத்தம் உறையாமல் இருக்கவும் ஹெபாரினை பயன்படுத்தி வருகிறார்கள்.நமது விஞ்ஞானிகள் இந்த புதிய மருந்தை ஆட்டின் ரத்தத்திலும்,மனித ரத்தத்திலும் செலுத்தி பரிசோதித்து பார்த்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.


உலக அளவில் ஹெபாரினை உற்பத்திசெய்யும் இத்தாலியை சேர்ந்த ஓபாக்ரின் என்ற மருந்து நிறுவனத்திற்கே அனுப்பி தரத்தினை உறுதி செய்திருக்கிறார்கள்.


உலக சுகாதார நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் உலகில்உள்ள இதய நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பர் எனக்கூறியுள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை.


மீனவப்பொருளாதாரம் : இதுவரை உணவிற்காகவும், இறால் பண்ணைகளில் இறால் உணவிற்காகவும் பயன்பட்ட சிப்பிகள் வணிகரீதியாக பயன்படும்பொழுது மீனவர்களின் பொருளாதார நிலை மேம்படும் என்பது கண்கூடு.


இவர்கள் கண்டுபிடித்த மருந்தினில் செல்களின் பெருக்கத்தை குறைக்கும் பண்பு இருப்பதால் பற்றுநோய் மற்றும் H I V க்கு மருந்தாக பயன்படுத்த முடியுமா ? என ஆராய்ச்சி செய்ய உள்ளார்கள்.இவர்களது முயற்சி வெற்றி அடைய வாழ்த்துவோமாக.

Sunday, April 20, 2008

முதல் இந்தியர் - மதுரைக்காரர்

முதல் இந்தியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? என்ற கேள்விகளுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்,மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து விடை தேடும் முயற்சியில் இறங்கின.இந்தியாவில் மனிதர்கள் இடம்பெயர்ந்தது 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.அப்படி இடம் பெயர்ந்தவர்கள் M130 என்ற மரபணுக்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர்களது ஆராய்ச்சியில் மதுரையில் இருந்து 50 கி.மி.தொலைவில் மேற்க்குதொடர்ச்சி மலைப்புகுதியில் அமைந்துள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறியகிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள 13 பேரின் D N A க்களை பரிசோதனை செய்துபார்த்ததில் அவர்கள் M 130 என்ற மரபணுக்கள் உடையவர்களாய் இருப்பதை வைத்து அவர்களின் மூதாதையர்களே முதல்இந்தியர்களாக இருக்கக்கூடும் என கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் M 130 என்ற மரபணுவை விட பழமையான மரபணுவை கொண்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.எனவே இந்த மரபணுவை கொண்டவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் தெற்காசியாவில் இருந்துதான் உலகின் மற்ற பகுதிகளுக்கு மக்கள் குடியேற்றம் நடந்தது என ஏற்கனவே மரபியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 16, 2008

யோகாசன ஆசிரியர் பயிற்சி

மதம் சார்ந்த விஷயம் அல்ல,உடல் நலன் சம்பந்தப்பட்டது என்பதால் இப்பொழுது யோகாசனபயிற்சிக்கு நல்ல வரவேற்பிருக்கிறது.
சுவாமி சச்சிதானந்தா அவர்களால் நிறுவப்பட்ட இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட் கோவையில் யோகாசன ஆசிரியர் பயிற்சி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
ஒருமாத பயிற்சி முகாமில் ஆசனம்,மூச்சுபயிற்சி,உடலை ஓய்வாக வைத்திருக்கும் முறைகள்,உடற்கூறு பற்றிய விளக்கங்கள்,உளவியல் என பல்வேறு விஷயங்களை போதிக்கின்றனர்.
இந்த பயிற்சிக்குபின் அவர்களுக்கு கல்வி நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,உடற்பயிற்சிகூடங்கள்,கார்பரேட் கம்பெனிகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
எனவே எந்த ஒரு சமயத்தை சார்ந்தவராக இருப்பினும் தயக்கமின்றி இதனை கற்று பயன்பெறலாம்.மேலும்அறிய 0422- 2556770 , 2542651 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, April 15, 2008

உலக புத்தக தினம்

வரும் ஏப்ரல் 23 ந்தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடுகிறார்கள்.ஷேக்ஸ்பியர் மற்றும் டான் க்விக் ஷாட் பிறந்ததினமான அன்று புத்தகங்களை வாங்கி நம்அறிவை விசாலமாக்குவதுடன் எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் கௌரவிப்போமாக

Saturday, April 12, 2008

தமிழ் புத்தாண்டு

காலை மிதித்தால் : எக்ஸ்கியூஸ் மீ

கையில் கொடுத்தால் : தேங்க்ஸ்

ஊட்டி விட்டால் : மம்மி

கூட்டிப்போனால் : டாடி

புத்தகம் பிரித்தால் : சேஸ்

கும்பிடப்போனால் : நமஹ

பல்லை இளித்தால் : லவ்

பாட்டி செத்தால் : டெத்

அட மறந்தே போச்சு ( தமிழரென்பது)

நாளை சித்திரை பர்ஸ்ட்டாம்

WISH YOU A HAPPY TAMIL NEW YEAR

( நன்றி திரு.பாமரன் )

Tuesday, March 25, 2008

வாங்கும் பொருட்களில் மின்சக்தி சேமிப்பு

இந்திய அரசின் சக்திஅமைச்சகம் ( ministry of power) B I S போன்று B E E எனும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளது(Bureau of Energy Efficiency).இந்த அமைப்பு ப்ரிட்ஜ்,ஏர் கண்டிசனர்,டியூப்லைட் போன்றவற்றில் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை நாம் உபயோகிக்கும்பொழுது எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கமுடியும்( elecricity consumption, energy efficiency ) என்பதை கணக்கிட்டு அவற்றுக்கு 1,2,3,4,5 நட்சத்திர அந்தஸ்து அளித்துள்ளது.அதிக நட்சத்திரம் பெறுவதன் மூலம் அதிக மின்சக்தியை அந்த பொருட்கள் சேமிக்கும் என்பதை குறிக்கும் முத்திரைகளுடன் B E E எனும் வில்லைகள் அந்த பொருட்களில் ஒட்டப்படுகின்றன.எனவே அடுத்த முறை நாம் டியூப்லைட்,ஏசி போன்றவை வாங்கும்பொழுது B E E முத்திரையையும்,எத்தனை நட்சத்திர குறியீடு உள்ளது என்பதையும் கவனித்து வாங்கினால் நமக்கும் நல்லது,நாட்டிற்கும் நல்லது.மேலும் விபரம் அறிய http://www.bee-india.nic.in/ என்ற முகவரியில் தேடலாம்.

Monday, March 24, 2008

யானையை விரட்டிய பெண்விவசாயி

கோவை அருகில் உள்ள வனங்களைஒட்டிய விவசாயநிலங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.அதற்காக மின்வேலி,பெரிய குழிகளை தோண்டுதல் போன்றவை செய்தும் பலனளிக்கவில்லை.ஆனால்சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தியில் பெங்களூர் பானரகட்டா தேசிய வனவிலங்கு பூங்கா அருகில் உள்ள பெண் விவசாயி ஒரு எளியமுறையில் யானைகளை வரவிடாமல் தடுத்துஉள்ளார்.

கேழ்வரகு பயிர்செய்த தனதுவயலில் பயன்படுத்திய இன்ஜின்ஆயில் , மிளகாய்பொடி,புகையிலைத்தூள் மூன்றும் கலந்த கலவையில் கயிறுகளை நனைத்து வயல்வெளியை சுற்றிலும் கட்டினார்.காட்டிலிருந்து வந்த யானைகள் இந்தவாசனையை மோப்பம் பிடித்தவுடன் திரும்பிப் போய்விட்டன

என்கிறார்.ஜிம்பாவே நாட்டு விவசாயிகள் இந்தமுறையை பயன்படுத்தித்தான் வெற்றி கண்டுள்ளனர் என்கிறாரிவர்.

Saturday, March 22, 2008

நூலகங்கள் - நமது பங்கு

டி.வி,சினிமா,கிரிக்கெட்,ரசிகர்மன்றம்,அரசியல் என பல கவர்ச்சிஅம்சங்களை தாண்டி குறிப்பிடத்தக்க அளவு இளைஞர்கள் இன்றும் நூலகங்களுக்கு செல்வது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.இவர்களுக்கு உதவ,இந்த நூலகங்களை மேம்படுத்த நமக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.

தமிழகஅரசின் நூலகத்துறையில்'' புரவலர்'' என்று ஒரு திட்டம் உள்ளது.இதில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1000. நூலகங்களில் வாங்கப்படும் செய்தித்தாள்கள்,வார மற்றும் மாதஇதழ்கள் வாங்குவதற்க்கு நாம்கொடுக்கும் தொகையை சேமிப்புநிதியில் வைத்து பயன்படுத்துகின்றனர்.

நாற்காலி,மேஜை,அலமாரிகள்,மின்விசிறிகள்,மின்விளக்குகள் போன்றவை கூட வாங்கிக்கொடுக்கலாம்.அல்லது அங்கு வாங்காத நல்ல இதழ்களுக்கு ஆண்டுசந்தாவோ,ஆயுள்சந்தாவோ கட்டிவிடலாம்.

நீங்கள் கொடுக்கும் பணம் அல்லது பொருட்கள் நீங்கள் குறிப்பிடும் பெயர்களில் ( தாய்,தந்தை,மனைவி அல்லது குழந்தைகள்) அங்குள்ள தகவல் பலகையில் எழுதப்படும்.

கிராம்ப்புற நூலகங்கள் இம்மாதிரி புரவலர்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

Thursday, March 20, 2008

கண்தானம் - புதியஅடித்தளம்

சமுதாயம் எனும் லேபிளில் கண்தானம் பதியபார்வை எனும் பதிவில் நடைமுறை ஆலோசனை ஒன்றை சொல்லியிருந்தேன்.காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அரசு இப்பொழுது ஒரு திட்டத்தை அமல்படுத்த எண்ணியுள்ளது.


அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மரணம் அடைந்தாலோ,அல்லது மூளை செயல்பாடுகள் முற்றிலும் செயல் இழந்தாலோ யாருடைய ஒப்புதலையும் பெறத்தேவையின்றி அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றுவதற்கு ( பிற நோயாளிகளுக்கு பொருத்த)டாக்டர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு உத்தேசித்துள்ளது.


இத்திட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் ஏற்படும் என்பதால் முதல்கட்டமாக, மரணமடையும் அல்லது மூளை செயல்பாடுகளை இழப்போரின் கண்களை பிறருக்கு பொருத்துவதை கட்டாயமாக்க உள்ளனர்.


ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இரண்டுலட்சம் பேரின் கண்தானம் தேவைப்படுகிறது.ஆனால் 15 ஆயிரம் பேர்தான் கண்தானம் செய்கின்றனர்.


எனவே இந்த திட்டம் மத, இன,ரீதியிலான உணர்வுகளை தாண்டி முனைந்து நிறைவேற்றப்பட்டால் ஒளிமயமான பாரதம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

Tuesday, March 18, 2008

நாமே மின்சாரம் தயாரிக்கலாமா ?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி.விவசாயத்துடன் பகுதிநேர பணியாக மின் மோட்டார்களுக்கு காயில் கட்டும் பணியை செய்துவருகிறார்.தனது தோட்டத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டினார்.அந்த வீட்டிற்க்கு மின்இணைப்புதர மின்வாரியம் காலதாமதம் செய்தது.உடனே இவர் தனது சொந்த அனுபவத்தை வைத்து காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தார்.வீட்டு மாடியில் 12அடி உயரத்தில் 6 இரும்பு இறக்கை கொண்டவிசிறியை அமைத்தார்.விசிறியின் பின்பகுதியில் டைனமோவை பொருத்தி சிறியசக்கரத்தை சுழலச்செய்து மின்சாரம் உற்பத்திசெய்கிறார்.
உற்பத்தியாகும் மின்சாரம் வீட்டின் உள்ளே இருக்கும் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.50 கிலோ எடை கொண்ட இந்த காற்றாலையில் தினமும் 400முதல் 600 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தியாகிறது. இதன் மூலம் டியூப்லைட்,டிவி, மின்விசிறி போன்றவை நன்றாகவே இயங்குகின்றன. நன்கு காற்று வீசும் இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்க்கு தேவையான மின்சப்ளைபெற ரூ.15 ஆயிரம் போதுமானது. இரும்புஇறக்கை,பேட்டரி,இன்வெட்டர்,மின்கோபுரம் அமைத்துவிடலாம்.இதில் இருந்து நாள்தோறும் 500 வாட்ஸ் மின்உற்பத்தி செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள மின்பற்றாக்குறையைத் தீர்க்கவும், மரபு சாரா எரிசக்தியை அனைவரும் பயன்படுத்தவும் அரசு இதுபோன்ற விசயங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

Thursday, March 13, 2008

புத்தகப்பூங்கா - ஞானாலயா

திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியார் இருவரின் கடின உழைப்பால் உருவாகியுள்ள இந்த தனியார் நூலகம் சுமார் 50,000 க்கும் மேற்ப்பட்ட நூல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 1842 ஆம்ஆண்டின் வீரமாமுனிவரின் சதுரகராதி ,G.U.போப் எழுதிய தமிழ் இலக்கண நூல் என மிகஅரிதான நூல்கள் இங்கு உள்ளது.

நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் இந்த நூலகத்தை பயன்படுத்தி முனைவர்பட்டம் பெற்றுள்ளனர்.ஆராய்ச்சி நோக்கில் வரும் மாணவர்கள் தங்குவதற்க்கு, உணவிற்க்கு என தனிக்கட்டணம் எதுவும் இவர்கள் வசூலிப்பதில்லை.

யாரேனும் தங்களிடம் உள்ள புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்க முன்வந்தால் இவர்களே நேரடியாகச் சென்று அவற்றைப் பெற்றுக்

கொள்கின்றனர்

ஞானாலயா - நூலகம்

6 ,பழனியப்பா நகர்,

திருகோகர்ணம்,

புதுக்கோட்டை. 622002

தொலைபேசி - 04322 221069

Wednesday, March 12, 2008

கன்யாகுமரிக்கு வரும் அறிவியல் ரதம்

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய ரயில்வே, விக்ரம்சாராபாய் அறிவியல்மையம், இந்தோ-ஜெர்மன் அமைப்பு மற்றும் சில தனியார் நிறுவனங்கள் ஆகியோரின் முயற்சியால் இந்தியா முழுவதும் வலம்வந்துள்ள SCIENCE EXPRESS எனும் இந்த ரயில் வரும் மார்ச் 20 முதல் 22 ந்தேதிவரை கன்யாகுமரியில் பொதுமக்கள் பார்வைக்கு வருகிறது.

16 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன்,மிக நேர்த்தியான வடிவமைப்புடன் ஒலி,ஒளி அமைப்புடன் செயல்படும் இந்த கண்காட்சி ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Bigbang,Nano cosmos என அறிவியலின் பல்வேறு பரிமாணங்களை இந்தரதம் மக்களுக்கு விளக்குகிறது.

Tuesday, March 11, 2008

கோலா நிறுவனங்களுடன் போட்டி போடும் பொடாரன்

பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவில் களம் இறங்கியவுடன் உள்ளூர் கோலி சோடா தயாரிப்பாளர்கள் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை.நடிகர்கள்,நடிகைகள்,விளையாட்டுவீரர்கள் குடித்ததை நாமும் குடிக்க ஆரம்பித்ததால் உள்ளூர் சோடா நிறுவனங்களுக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்தது.
ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு இணையான தொகையை விளம்பரங்களுக்காக அவர்கள் செலவு செய்வதுகண்டு நமது வியாபாரிகள் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளைசெய்வதோடு தங்கள்எல்லைகளை குறுக்கிக்கொண்டனர்.கறுப்புகலர்,ஜிஞ்சர் போன்றவை எங்கே சென்றன எனத்தெரியவில்லை.
ஆனால்இதையும் தாண்டி ஈரோடுமாவட்டம் காங்கயத்தில் உள்ள பொடாரன் குளிர்பான நிறுவனம் சென்னிமலை,முத்தூர்,வெள்ளகோவில், என சுற்றுப்புறங்களில் அசைக்கமுடியாத நுகர்வோர்களை பெற்றுள்ளது ஆச்சரியமான ஒன்று.
பெரியநிறுவனங்களின் சாம,பேத,தான நடவடிக்கைகளை மீறி காங்கயம் பகுதியில் அந்தநிறுவனம் முன்ணணியில் இருப்பது நம்மை மிகவும் வியப்பிற்க்கு ஆளாக்குகிறது.

Saturday, March 8, 2008

பத்மஸ்ரீ விருதை மறுத்த ஜெகநாதன்

நாகப்பட்டினம் பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாய் இருந்துவரும் இறால்பண்ணைகளுக்கு எதிராக அறவழியில் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்தனர் ஜெகநாதன்தம்பதியினர்.ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

அதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிமன்றமும் இறால் பண்ணைகளை நெறிப்படுத்த ஆணைபிறப்பித்தது.ஆனால் அன்றைய மத்தியஅரசோ அதை நடைமுறைப்படுத்தவில்லை.தொடர்ந்து வந்த காலங்களில் மத்தியரசு இவரது சுதந்திரகால போராட்ட தியாகங்களையும்,சர்வோதய கொள்கைகளையும் கௌரவிக்க பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது.ஆனால் இறால்பண்ணை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசு கொடுக்கும் இந்தவிருது எனக்குவேண்டாம் என மறுத்துவிட்டார்.

மகளிர்தினப் பதிவு - பெண்ணின் வெற்றி

1968 ஆம்ஆண்டு கூலிஉயர்வு கேட்ட தலித்மக்கள் 44 பேர் வெண்மணிகிராமத்தில் எரித்து கொலை செய்யப்பட்டபோது கொதித்து எழுந்தவர்தான் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தம்பதியினர்.





நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியில் இவர் ஆரம்பித்த லாப்டி இயக்கம் ( LAND FOR TILLERS FREEDOM ) இதுவரை 10,000 ஏக்கர் நிலங்களை அகிம்சை வழியில் நிலச்சுவான்தார்களிடம் இருந்து மீட்டு ஏழைமக்களுக்கு சொந்தமாக்கி உள்ளது.குடிசைவாழ் மக்களுக்காக 5000 ஓட்டுவீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். 35 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்துவரும் இவரது பணியைப் பாராட்டி அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.





இவரது சாதனைகளுக்கு பின்புலமாக இருப்பவர் இவரது கணவரும்,சுதந்திரப்போராட்ட வீரருமான திரு. ஜெகநாதன் அய்யாஅவர்கள்.

மகளிர் தின பதிவு - மெய்யான அழகி


பத்மஸ்ரீ. கிருஷ்ணம்மாள்ஜெகநாதன் ( 82 )



ஆடையும்,ஒப்பனைகளும் அழகை வெளிப்படுத்துவதை விட அவர்தம் குணங்களும்,கடைபிடிக்கும் கொள்கைகளுமே ஒருவரை அழகாக மாற்றுகிறது.

Tuesday, March 4, 2008

கொங்கு வட்டார வழக்கு

கொங்குவாசல் பதிவு படித்தவுடன் நாமளும் ஒரு பதிவ போடனும்னு நாகரீகம் கருதி மறந்த வார்த்தைகளை தொழாவி புடிச்சேன்.
1.வெத்தல பாக்கு மாத்தறது
2.உப்புச்சக்கர வாங்கறது -இரண்டும் திருமண நிச்சயத்தின்போது நடப்பது
3.அருமக்காரர் -கல்யாணவீட்டில் சீர் செய்பவர்
4.துப்புட்டு, ரட்டு - போர்வை
5.இடால் - வயலில் பயன்படும் எலிப்பொறி
6.ராந்தல் - அரிக்கேன் விளக்கு
7.கவக்கோல் - Y வடிவ குச்சி

இருளிலிருந்து ஒளிக்கு

கண்தானம்-தெரிந்துகொள்ளவேண்டியவை.
1.கண்தானத்தில் தானம் கொடுப்பவரின் ஆயுள் முடிந்து 6 மணிநேரத்திற்க்குள் கண்கள் எடுக்கப்படவேண்டும்
2.கண்ணாடி அணிந்தவர்கள்,காடராக்ட் புரை உள்ளவர்களும் கூட கண்தானம் செய்யலாம்.
3.கண்கள் தூசியற்றதாகவும்,தூய்மையாகவும் இருக்க கண்களை மூடி ஈரபஞ்சை வைத்து கட்டிவைக்கவும்
4.கண்களை எடுக்க தனிஅறை தேவை இல்லை. பத்துநிமிடம் போதும்
5.கண்களை எடுப்பதால் எவ்வித குறையோ மாற்றமோ இருக்காது.
6.செயற்க்கை கண்கள் அப்போதே பொருத்தப்படும்.

Wednesday, February 27, 2008

கண்தானம் - புதிய பார்வை

நம்மில் பெரும்பாலோர் கண்தானம் செய்ய பதிவுசெய்து வைத்துஇருப்பர்.ஆனால் பார்வையற்றோர் கண்தானம் பெற அதற்காக நிறையவருடங்கள் காத்திருக்கவேண்டும்.இருப்பினும் நம்மால் இப்பொழுதே உதவமுடியும்.எவ்வாரெனில் நமது வீட்டிற்க்கு அருகில் ஒரு இறப்பு நிகழும்பொழுது நாம் அங்குசென்று அவர்களிடம் பக்குவமாக எடுத்துக்கூறினால் கூடுமானவரையில் அங்கு கண்தானம் நடக்க வாய்ப்புஉண்டு. 24 மணி நேரத்திற்க்குள் அந்த கண்கள் இருநபர்களுக்கு பொருத்தப்படும். ( தொடரும் )

சிறுதுளி - தொடர்ச்சி

இயற்கை வேளாண்மை பயிற்சி பற்றி மேலும் அறிய 093631-47111, 093446-61647, 098946-31551 தொலைபேசி எண்களில் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

Tuesday, February 26, 2008

சிறுதுளி - பெருவெள்ளம்

கோவை வாழ் மக்கள் சிலரால் துவங்கப்பெற்ற சிறுதுளி அமைப்பு காஞ்சிமாநதி எனும் நொய்யல்நதி பற்றிய விழிப்புணர்வை கோவைமாவட்டமக்களிடம் ஏற்படுத்தியது மறக்கமுடியாத நிகழ்வு.இப்பொழுது பாலேக்கர் எனும் இயற்கைவிஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ZERO BUDGET விவசாயம் பற்றிய பயிற்சிவகுப்புகளை நடத்த உள்ளனர்.மார்ச் 22,23,24,25 தேதிகளில் கோவையில் நடக்க உள்ளது. 4 நாட்கள் உணவு, தங்குமிடம் சேர்த்து ரூ.400 மட்டும். விவசாயத்தில் நலிவுற்ற உழவர்களுக்கு இந்த செய்தியை கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காந்தியம் -தொடர்ச்சி

திரு.நா.மார்கண்டன் அவர்களது அஞ்சல் முகவரி;

முன்னாள் துணைவேந்தர்,

காந்திகிராம பல்கலைகழகம்

இலக்கம் 5, இந்திராணி இல்லம்,

சத்தி முதல் குறுக்கு சந்து,

G.P.மருத்துவமனை எதிர்புறம்

காந்திபுரம்,

கோவை.641012

காந்தியம் - பயிற்சிவகுப்பு

இன்றைய இளைஞர்களுக்கு ஏற்படும் தனிமனித பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகளை காந்தியவழியில் எப்படி எதிர்கொள்வது என்ற கருத்தினை முன்வைத்து திரு.நா.மார்கண்டன் அவர்கள் ஒரு முகாம் நடத்த உள்ளார்.ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்வதுடன் பிறருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்பு முகவரி
திரு.நா.மார்கண்டன்
முன்னாள் துணைவேந்தர்
காந்திகிராம பல்கலைகழகம். செல்பேசி 094433 49227