Saturday, September 6, 2008

தமிழர் நாகரிகச் செழுமை

தமிழர்தம் நாகரிகம் எவ்வளவு மேன்மையுற்று இருந்தது என்பதை ஆன்மீக இலக்கியங்களை எந்த விருப்புவெறுப்பும் இல்லாமல் படித்தோமானால் தெரிந்து கொள்ளமுடியும்.சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர் என்ற சிவபக்தர் கதை ஒன்று வருகிறது.அதில் ஒரு பாடல்.


பரிசு விளங்கப் பரிகலமும்


திருத்திப் பாவாடையில் ஏற்றித்


தெரியும் வண்ணம் செஞ்சாலிச்


செழும்போ னகமும் கறியமுதும்


வரிசை யினில்முன் படைத்தெடுத்து


மன்னும் பரிக லக்கால்மேல்


விரிவெண் துகிலின் மிசைவைக்க


விமலர் பார்த்துஅங்கு அருள்செய்வார்


பரிசு -இயல்பு, பரிகலம் - உண்கலம், பாவாடை - பரப்பிய ஆடை, சாலிச்செழும்போனகம் - சம்பா அரிசிச்சோறு, பரிகலக்கால் - முக்காலி போன்று அமைந்துள்ள உணவு வைத்து உண்ணும் ஆசனம்.


நல்லியல்பின் விளங்க உண்கலத்தை விளக்கி அதனை ஒரு பரப்பிய துணியின் மீது வைத்து அமுதவகைகள் நன்கு தெரியும்படி செழுமையான சாலிநெல்லரிசிச்சோறும் கறிவகைகளும் வரிசையாகப் படைத்துச் சிறப்பின்மிக்க அப்பரிகலத்தை நிலையான முக்காலியின் மீது வெண்துகில் பரப்பி அதன்மீது வைக்க ஆங்கு அடியவர் அவற்றைக்கண்டு உரைக்கலானார்.


சேக்கிழாரின் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது.அப்போதே டைனிங்டேபிளின் மேல் துணியை விரித்து உணவு பரிமாறும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதிலிருந்து தமிழர் நாகரீகம் எவ்வளவு செழுமையானது என்பதை அறியமுடிகிறது.

2 comments:

பொடியன்-|-SanJai said...

அண்ணாச்சி உங்க வலைப்பூவை தமிழிஷில் இணைக்கலாமே.. ரொம்ப நல்ல தகவல்கள் எழுதறிங்க.

வேளராசி said...

சஞ்சய் உங்கள் வருகைக்கும்,அன்பிற்கும் நன்றி.