Tuesday, December 9, 2008

கல்வி உதவி

இனிய தோழர்/தோழிகளே,

"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை"

என்பதற்க்கு இலக்கணம் போல நண்பர் ஆனந்த் பொன்னுசாமி உள்ளார்.

இவர் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திவரும் DRCET அமைப்பு, ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி புரிந்து வருகிறது.





இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்


உலகத்திலேயே சிறந்த புண்ணியம் இது என்கிறார் பாரதியார்.

உங்களால் முடிந்த பங்களிப்பை தாருங்கள்.


நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப் பெருந் தொழில் நாட்டுவம் நாரீர்!

Contact:
P.Ananth Prasath - Email : ananthprasath@drcet.org Phone : +91-97313 22008
M.Krishna Priya - Email :
priyarajeswari@gmail.com Phone: +91-98809 60332
http://www.drcet.org/
நன்றி திரு.சதீஸ் அவர்களுக்கு.

Saturday, November 15, 2008

தீராநதி மற்றும் கோவை ஓசை - ஒரு நேர்காணல்

கோவையில் செயல்பட்டுவரும் '' ஓசை'' அமைப்பு வனங்கள் மற்றும் வன உயிர்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு தன்னார்வ நிறுவனமாகும்.இவர்கள் வருடந்தோறும் நடத்தும் ''கானுயிர் புகைப்படக் கண்காட்சி '' நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.http://maravalam.blogspot.com/2008_09_01_archive.html

தீராநதி இதழில் திரு.காளிதாஸ் ( ஓசை ) அவர்களது பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

கேள்வி:மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய உங்களது பார்வை ?





உலகில் உயர்ந்த மலை எனக்கேட்டால் இமயமலை எனக்கூறுகிறோம்.ஆனால் இமயமலையை விட சில லட்சம் ஆண்டுகள் முன்பே மேற்குத் தொடர்ச்சி மலை தோன்றி இருக்கும் என மண்ணியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சோலைக்காடுகளில் படிந்திருக்கக் கூடிய மேல் மண்,அங்கிருக்கின்ற இலை,தழைகளால் உருவாகின்ற மண்.இந்த சோலைக்காடுகளைத்தான் வள்ளுவர் '' அணி நிழற்காடு '' எனக்கூறி இருப்பார் என்று தோன்றுகிறது.சோலைக்காடுகள் உயர்ந்து வளராவிட்டாலும் அடர்ந்து வளரும்.சூரியஒளி உள்ளே புகாது. அந்த சூரிய ஒளி உள்ளே புகாத இருட்டு பகுதியில் இலைதலைகள் கீழே விழுந்து பறவை,விலங்குகளின் கழிவுகள் கலந்து நுண்ணுயிர்களால் மாற்றம் செய்யப்பட்டு அந்த மண் உருவாகின்றது.

ஒரு அரை இன்ச் அந்த மேல்மண் படிவுகள் உருவாகுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகுமென்று மண்ணியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.ஆனால்மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளில் அடுக்கடுக்கான அந்த மண்படிவுகள் இருக்கின்றன.அவை அந்தக் காட்டின் பழமையைக் குறிக்கின்றன.இவை உணர்த்துகின்ற இன்னொரு உண்மை,இந்தக் காட்டை நம்மால் உருவாக்க முடியாது என்பதுதான்.காடு வளர்ப்பு பணிகள் என்று பலவற்றை நாம் செய்யலாம்.வெறும் மரங்கள் மட்டுமே காடுகள் ஆகிவிட முடியாது.சோலைக்காடுகள் என்பது அங்குள்ள நுண்ணுயிர்,பறவைகள்,விலங்குகள்,தாவரங்கள் மற்றும் பல வளமைகளை உள்ளடக்கியது.இதை நம்மால் உருவாக்க முடியாது,ஆனால் காப்பாற்றமுடியும். ( தொடரும் )












Sunday, November 2, 2008

கிராமக் குழந்தைகள் நூலகம்




நூலகங்கள் காலத்தின் போக்கில் கடக்கும் விசயங்களை, சேகரிக்கும் செய்திகள், நூல்களை நாளை வரப்போகும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கை சூழலினை தரப்போகும் முக்கிய அம்சம்!எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு தீர்வுகளை கண்டுகொண்டிருந்தாலும், இந்த பணி ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மிகச்சரியானதொரு பணியாக,இவர்கள் முன்நின்று செய்யும் இந்த அடையாளம் - அரும்புகள் வாசிப்பு இயக்கம் கோவை வாழ் எளிய மக்களின் பிள்ளைகள், சிறுவர் சிறுமியர்களின் புத்தகங்கள் மீதான ஆர்வம் - அடையாளம் எனும் அமைப்பால் தரப்பட்டிருக்கிறது!ஆம்!எதிர்காலத்தில் சமூகத்தில் நல்லதொரு அடையாளம் தரும் சிறந்த மனிதர்களை உருவாக்கும் பணியாக....!இவர்களின் சிறு கோரிக்கையாக மலர்ந்திருப்பது உங்களால் முடிந்த அளவு நூல்களை தாருங்கள், புத்தகங்களை கொடுத்து இளைய தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு இயன்றளவு உதவுங்கள் என்பதுதான்!இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உதவிகள் சிறிதாக இருந்தாலும் கூட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் மாபெரும் நற்பணி!



கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும்வழியில் காரமடை எனும் ஊரில் உள்ளது அடையாளம் எனும் அமைப்பு.தன்னார்வத்தோடு செயல்படும் பலரது முயற்சியால் பெரியநாய்க்கன் பாளையம் எனும் பகுதியில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த 1400 குழந்தைகள் அவர்களே நிர்வகிக்கும் நூலகமாக


ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த அமைப்பின் சிறப்பம்சம் பணமாக வரும் உதவிகளை ஏற்பதில்லை என்பதுதான்.அதற்கு பதிலாக நூல்நிலையங்களுக்கு பணத்தை அனுப்பச்சொல்லி அங்கிருந்து தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.


அவர்களது தொடர்பு முகவரி


திரு.தண்டபாணி. அலைபேசிஎண் 98423 51324


திருமதி.அம்சவேணி. அலைபேசிஎண் 98421 51323


முகவரி


அடையாளம் அமைப்பு


2 / 563,பெத்தட்டாபுரம்,


காரமடை அஞ்சல்


கோயம்புத்தூர் 641 104.

நன்றி திரு.ஆயில்யன் அவர்களுக்கு.




Wednesday, October 15, 2008

கோவையில் உபுண்டு திட்டம்.

சென்னையிலிருந்து திரு.ராமதாஸ் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மின்மடலை அனைவரின் பார்வைக்கு வைக்கிறேன்.
''வணக்கம்
உபுண்டுவின் அடுத்த வெளியீடு இந்திரிபிட் ஐபக்ஸ் வெளிவர இன்னும் பதினாறுநாட்களே உள்ளன. முந்தைய வெளியீடுகளின் போது எளிய வெளியீட்டு நிகழச்சிகளைநடத்தியது போலவே இம்முறையும் வெளியீட்டு நிகழ்ச்சியொன்றை உபுண்டு தமிழ்குழுமம் நடத்த உள்ளது. நவம்பர் ஒன்று அதற்குரிய நாளாக கருதுகிறோம்.
சிறிய மாற்றமாக எப்போதும் சென்னையிலேயே இதனைச் செய்து வந்த நாங்கள்இம்முறை சென்னையைத் தாண்டி கொண்டாட வேண்டும் எனக் கருதுகிறோம். தாங்கள்வசிக்கும் ஊரில் இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இயலுமாயின் அதனைவரவேற்கிறோம்.
நவம்பர் 01, 02 சனி ஞாயிறாக இருப்பதால் உபுண்டுவை மக்களுக்கு/மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் இது அமையலாம். உபுண்டுநிறுவும் முறை, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் தமிழ்,உபுண்டுவில் பாடல் கேட்பது எனப் பலவற்றையும் செய்முறையாக விளக்கிக்காட்டலாம்... தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகள்/ கல்விக் கூடங்களில்இதற்கான ஏற்பாட்டை செய்ய இயலுமாயின் மகிழ்ச்சி. உபுண்டு ஆசான்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியாகவும் இது அமையலாம்.
எங்கள் குழுமத்திலுருந்து இருவர் உங்களை நாடி உபுண்டுவுடன் வருவோம்.தங்களால் தங்களூரில் ஒருங்கிணைத்து உதவ முடியுமா? மூன்று... ஐந்துகணினிகள்... பத்து.. இருபது.. எவ்வளவு பேர் இருந்தாலும் சரி.. மென்விடுதலை வேட்கை இருந்தால் போதும்... எமது முகவரிக்கு விரைந்து மடல்அனுப்பவும். இச்செய்தியை பிறருக்கும் தெரியப்படுத்தி உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.''
தங்களது ஆலோசனைகளை எனது மின்மடலுக்கு velarasi@gmail.com வரவேற்கிறேன்.

Thursday, October 9, 2008

சியாட்டில் வாழ் தமிழர்களுக்கு



எனது முந்தைய பதிவில் எழுதியுள்ள பத்மஸ்ரீ.கிருஷ்ணம்மாள் அவர்கள் சியாட்டில் பல்கலைக்கழகம் வழங்கும் ஓபஸ் விருதினைப் பெறுவதற்காக இந்த மாத நடுவில் அமெரிக்கா வருகிறார்.பாஸ்டன்,பிலடெல்பியா,வாஷிங்டன்,சான்டியாகோ,சான்பிரான்ஸ்கோ

பகுதிகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நவம்பர்மாதம் 18ஆம் தேதியன்று ஓபஸ் விருதினைப் பெறுகிறார்.

இரண்டு விருதுகளைப் பெறும் இந்தப் பெறுந்தகை விருதுத்தொகையான சுமார் ரூபாய் எழுபதுலட்சத்தை வீடற்ற,நிலமற்ற நபர்களுக்காக செலவிட உள்ளார்.

இவரது பயணவிவரம் அறியhttp://www.shantinik.blogspot.com/

மாற்று நோபல் பரிசு பெறும் தமிழ்அன்னை

லாப்டி-உழுபவர்க்கே நிலம் சொந்தம்.



ஸ்வீடன் நாட்டிலிருந்து வழங்கப்படும் ரைட்லைவ்லிஹூட் விருது தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவழியை பின்பற்றும் கிருஷ்ணம்மாள்ஜெகநாதன் அவர்களுக்கு,அவரது லாப்டி அமைப்பின் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.தம்பதியரது பணிகளை,தியாகத்தைப் பற்றி முன்பே மூன்று பதிவுகள் எழுதியுள்ளேன்.மேலும் இவரது பணியிணைப் பற்றி அறியhttp://www.lafti.net/