Thursday, October 9, 2008
சியாட்டில் வாழ் தமிழர்களுக்கு
மாற்று நோபல் பரிசு பெறும் தமிழ்அன்னை
லாப்டி-உழுபவர்க்கே நிலம் சொந்தம்.
Saturday, March 8, 2008
பத்மஸ்ரீ விருதை மறுத்த ஜெகநாதன்
நாகப்பட்டினம் பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாய் இருந்துவரும் இறால்பண்ணைகளுக்கு எதிராக அறவழியில் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்தனர் ஜெகநாதன்தம்பதியினர்.ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.
அதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிமன்றமும் இறால் பண்ணைகளை நெறிப்படுத்த ஆணைபிறப்பித்தது.ஆனால் அன்றைய மத்தியஅரசோ அதை நடைமுறைப்படுத்தவில்லை.தொடர்ந்து வந்த காலங்களில் மத்தியரசு இவரது சுதந்திரகால போராட்ட தியாகங்களையும்,சர்வோதய கொள்கைகளையும் கௌரவிக்க பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது.ஆனால் இறால்பண்ணை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசு கொடுக்கும் இந்தவிருது எனக்குவேண்டாம் என மறுத்துவிட்டார்.
மகளிர்தினப் பதிவு - பெண்ணின் வெற்றி
1968 ஆம்ஆண்டு கூலிஉயர்வு கேட்ட தலித்மக்கள் 44 பேர் வெண்மணிகிராமத்தில் எரித்து கொலை செய்யப்பட்டபோது கொதித்து எழுந்தவர்தான் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தம்பதியினர்.
நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியில் இவர் ஆரம்பித்த லாப்டி இயக்கம் ( LAND FOR TILLERS FREEDOM ) இதுவரை 10,000 ஏக்கர் நிலங்களை அகிம்சை வழியில் நிலச்சுவான்தார்களிடம் இருந்து மீட்டு ஏழைமக்களுக்கு சொந்தமாக்கி உள்ளது.குடிசைவாழ் மக்களுக்காக 5000 ஓட்டுவீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். 35 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்துவரும் இவரது பணியைப் பாராட்டி அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.
இவரது சாதனைகளுக்கு பின்புலமாக இருப்பவர் இவரது கணவரும்,சுதந்திரப்போராட்ட வீரருமான திரு. ஜெகநாதன் அய்யாஅவர்கள்.

