Showing posts with label கிருஷ்ணம்மாள். Show all posts
Showing posts with label கிருஷ்ணம்மாள். Show all posts

Thursday, October 9, 2008

சியாட்டில் வாழ் தமிழர்களுக்கு



எனது முந்தைய பதிவில் எழுதியுள்ள பத்மஸ்ரீ.கிருஷ்ணம்மாள் அவர்கள் சியாட்டில் பல்கலைக்கழகம் வழங்கும் ஓபஸ் விருதினைப் பெறுவதற்காக இந்த மாத நடுவில் அமெரிக்கா வருகிறார்.பாஸ்டன்,பிலடெல்பியா,வாஷிங்டன்,சான்டியாகோ,சான்பிரான்ஸ்கோ

பகுதிகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நவம்பர்மாதம் 18ஆம் தேதியன்று ஓபஸ் விருதினைப் பெறுகிறார்.

இரண்டு விருதுகளைப் பெறும் இந்தப் பெறுந்தகை விருதுத்தொகையான சுமார் ரூபாய் எழுபதுலட்சத்தை வீடற்ற,நிலமற்ற நபர்களுக்காக செலவிட உள்ளார்.

இவரது பயணவிவரம் அறியhttp://www.shantinik.blogspot.com/

மாற்று நோபல் பரிசு பெறும் தமிழ்அன்னை

லாப்டி-உழுபவர்க்கே நிலம் சொந்தம்.



ஸ்வீடன் நாட்டிலிருந்து வழங்கப்படும் ரைட்லைவ்லிஹூட் விருது தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவழியை பின்பற்றும் கிருஷ்ணம்மாள்ஜெகநாதன் அவர்களுக்கு,அவரது லாப்டி அமைப்பின் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.தம்பதியரது பணிகளை,தியாகத்தைப் பற்றி முன்பே மூன்று பதிவுகள் எழுதியுள்ளேன்.மேலும் இவரது பணியிணைப் பற்றி அறியhttp://www.lafti.net/



Saturday, March 8, 2008

பத்மஸ்ரீ விருதை மறுத்த ஜெகநாதன்

நாகப்பட்டினம் பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாய் இருந்துவரும் இறால்பண்ணைகளுக்கு எதிராக அறவழியில் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்தனர் ஜெகநாதன்தம்பதியினர்.ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

அதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிமன்றமும் இறால் பண்ணைகளை நெறிப்படுத்த ஆணைபிறப்பித்தது.ஆனால் அன்றைய மத்தியஅரசோ அதை நடைமுறைப்படுத்தவில்லை.தொடர்ந்து வந்த காலங்களில் மத்தியரசு இவரது சுதந்திரகால போராட்ட தியாகங்களையும்,சர்வோதய கொள்கைகளையும் கௌரவிக்க பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது.ஆனால் இறால்பண்ணை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசு கொடுக்கும் இந்தவிருது எனக்குவேண்டாம் என மறுத்துவிட்டார்.

மகளிர்தினப் பதிவு - பெண்ணின் வெற்றி

1968 ஆம்ஆண்டு கூலிஉயர்வு கேட்ட தலித்மக்கள் 44 பேர் வெண்மணிகிராமத்தில் எரித்து கொலை செய்யப்பட்டபோது கொதித்து எழுந்தவர்தான் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தம்பதியினர்.





நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியில் இவர் ஆரம்பித்த லாப்டி இயக்கம் ( LAND FOR TILLERS FREEDOM ) இதுவரை 10,000 ஏக்கர் நிலங்களை அகிம்சை வழியில் நிலச்சுவான்தார்களிடம் இருந்து மீட்டு ஏழைமக்களுக்கு சொந்தமாக்கி உள்ளது.குடிசைவாழ் மக்களுக்காக 5000 ஓட்டுவீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். 35 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்துவரும் இவரது பணியைப் பாராட்டி அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.





இவரது சாதனைகளுக்கு பின்புலமாக இருப்பவர் இவரது கணவரும்,சுதந்திரப்போராட்ட வீரருமான திரு. ஜெகநாதன் அய்யாஅவர்கள்.

மகளிர் தின பதிவு - மெய்யான அழகி


பத்மஸ்ரீ. கிருஷ்ணம்மாள்ஜெகநாதன் ( 82 )



ஆடையும்,ஒப்பனைகளும் அழகை வெளிப்படுத்துவதை விட அவர்தம் குணங்களும்,கடைபிடிக்கும் கொள்கைகளுமே ஒருவரை அழகாக மாற்றுகிறது.