Saturday, March 8, 2008

மகளிர்தினப் பதிவு - பெண்ணின் வெற்றி

1968 ஆம்ஆண்டு கூலிஉயர்வு கேட்ட தலித்மக்கள் 44 பேர் வெண்மணிகிராமத்தில் எரித்து கொலை செய்யப்பட்டபோது கொதித்து எழுந்தவர்தான் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தம்பதியினர்.





நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியில் இவர் ஆரம்பித்த லாப்டி இயக்கம் ( LAND FOR TILLERS FREEDOM ) இதுவரை 10,000 ஏக்கர் நிலங்களை அகிம்சை வழியில் நிலச்சுவான்தார்களிடம் இருந்து மீட்டு ஏழைமக்களுக்கு சொந்தமாக்கி உள்ளது.குடிசைவாழ் மக்களுக்காக 5000 ஓட்டுவீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். 35 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்துவரும் இவரது பணியைப் பாராட்டி அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.





இவரது சாதனைகளுக்கு பின்புலமாக இருப்பவர் இவரது கணவரும்,சுதந்திரப்போராட்ட வீரருமான திரு. ஜெகநாதன் அய்யாஅவர்கள்.

No comments: