Saturday, March 8, 2008

பத்மஸ்ரீ விருதை மறுத்த ஜெகநாதன்

நாகப்பட்டினம் பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாய் இருந்துவரும் இறால்பண்ணைகளுக்கு எதிராக அறவழியில் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்தனர் ஜெகநாதன்தம்பதியினர்.ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

அதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிமன்றமும் இறால் பண்ணைகளை நெறிப்படுத்த ஆணைபிறப்பித்தது.ஆனால் அன்றைய மத்தியஅரசோ அதை நடைமுறைப்படுத்தவில்லை.தொடர்ந்து வந்த காலங்களில் மத்தியரசு இவரது சுதந்திரகால போராட்ட தியாகங்களையும்,சர்வோதய கொள்கைகளையும் கௌரவிக்க பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது.ஆனால் இறால்பண்ணை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசு கொடுக்கும் இந்தவிருது எனக்குவேண்டாம் என மறுத்துவிட்டார்.

No comments: