Tuesday, March 11, 2008

கோலா நிறுவனங்களுடன் போட்டி போடும் பொடாரன்

பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவில் களம் இறங்கியவுடன் உள்ளூர் கோலி சோடா தயாரிப்பாளர்கள் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை.நடிகர்கள்,நடிகைகள்,விளையாட்டுவீரர்கள் குடித்ததை நாமும் குடிக்க ஆரம்பித்ததால் உள்ளூர் சோடா நிறுவனங்களுக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்தது.
ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு இணையான தொகையை விளம்பரங்களுக்காக அவர்கள் செலவு செய்வதுகண்டு நமது வியாபாரிகள் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளைசெய்வதோடு தங்கள்எல்லைகளை குறுக்கிக்கொண்டனர்.கறுப்புகலர்,ஜிஞ்சர் போன்றவை எங்கே சென்றன எனத்தெரியவில்லை.
ஆனால்இதையும் தாண்டி ஈரோடுமாவட்டம் காங்கயத்தில் உள்ள பொடாரன் குளிர்பான நிறுவனம் சென்னிமலை,முத்தூர்,வெள்ளகோவில், என சுற்றுப்புறங்களில் அசைக்கமுடியாத நுகர்வோர்களை பெற்றுள்ளது ஆச்சரியமான ஒன்று.
பெரியநிறுவனங்களின் சாம,பேத,தான நடவடிக்கைகளை மீறி காங்கயம் பகுதியில் அந்தநிறுவனம் முன்ணணியில் இருப்பது நம்மை மிகவும் வியப்பிற்க்கு ஆளாக்குகிறது.

1 comment:

தருமி said...

இதுமாதிரி எங்க ஊர்ல BOVONTO