Saturday, March 22, 2008

நூலகங்கள் - நமது பங்கு

டி.வி,சினிமா,கிரிக்கெட்,ரசிகர்மன்றம்,அரசியல் என பல கவர்ச்சிஅம்சங்களை தாண்டி குறிப்பிடத்தக்க அளவு இளைஞர்கள் இன்றும் நூலகங்களுக்கு செல்வது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.இவர்களுக்கு உதவ,இந்த நூலகங்களை மேம்படுத்த நமக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.

தமிழகஅரசின் நூலகத்துறையில்'' புரவலர்'' என்று ஒரு திட்டம் உள்ளது.இதில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1000. நூலகங்களில் வாங்கப்படும் செய்தித்தாள்கள்,வார மற்றும் மாதஇதழ்கள் வாங்குவதற்க்கு நாம்கொடுக்கும் தொகையை சேமிப்புநிதியில் வைத்து பயன்படுத்துகின்றனர்.

நாற்காலி,மேஜை,அலமாரிகள்,மின்விசிறிகள்,மின்விளக்குகள் போன்றவை கூட வாங்கிக்கொடுக்கலாம்.அல்லது அங்கு வாங்காத நல்ல இதழ்களுக்கு ஆண்டுசந்தாவோ,ஆயுள்சந்தாவோ கட்டிவிடலாம்.

நீங்கள் கொடுக்கும் பணம் அல்லது பொருட்கள் நீங்கள் குறிப்பிடும் பெயர்களில் ( தாய்,தந்தை,மனைவி அல்லது குழந்தைகள்) அங்குள்ள தகவல் பலகையில் எழுதப்படும்.

கிராம்ப்புற நூலகங்கள் இம்மாதிரி புரவலர்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

No comments: