Thursday, March 13, 2008

புத்தகப்பூங்கா - ஞானாலயா

திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியார் இருவரின் கடின உழைப்பால் உருவாகியுள்ள இந்த தனியார் நூலகம் சுமார் 50,000 க்கும் மேற்ப்பட்ட நூல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 1842 ஆம்ஆண்டின் வீரமாமுனிவரின் சதுரகராதி ,G.U.போப் எழுதிய தமிழ் இலக்கண நூல் என மிகஅரிதான நூல்கள் இங்கு உள்ளது.

நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் இந்த நூலகத்தை பயன்படுத்தி முனைவர்பட்டம் பெற்றுள்ளனர்.ஆராய்ச்சி நோக்கில் வரும் மாணவர்கள் தங்குவதற்க்கு, உணவிற்க்கு என தனிக்கட்டணம் எதுவும் இவர்கள் வசூலிப்பதில்லை.

யாரேனும் தங்களிடம் உள்ள புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்க முன்வந்தால் இவர்களே நேரடியாகச் சென்று அவற்றைப் பெற்றுக்

கொள்கின்றனர்

ஞானாலயா - நூலகம்

6 ,பழனியப்பா நகர்,

திருகோகர்ணம்,

புதுக்கோட்டை. 622002

தொலைபேசி - 04322 221069

1 comment:

தருமி said...

தம்பதியருக்கு வாழ்த்து.