Tuesday, August 5, 2008

பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

இன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மாமன்னன் இராசராசன் பரிசு - 2008 விருதுத்தொகை :ஒரு இலட்சத்து ஒரு ரூபாய் மற்றும் சான்றிதழ்.# புதினம்,கவிதை,நாடகம்,கலையழகு மிளிரும் உரைநடை ஆகியன பரிசுக்குரியன. #01.07.2007 முதல் 30.06.2008 நாளுக்கு முன் வெளியீடானவை.#நூலின் ஆசிரியர் எந்நாட்டவராகவும் அமையலாம்.#எவர் வேண்டுமானாலும்,குறித்த பரிந்துரைப்படிவங்களில் தங்கள் முன்மொழிவை அனுப்பிவைக்கலாம்.படிவங்களைப் பதிவாளர்,தமிழ்ப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்-613 010 என்ற முகவரிக்கு ரூ 10 அஞ்சல் தலை ஒட்டிய தன்முகவரி உறை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.#படிவம் கிடைக்காவிடில் பரிந்துரையாளரின் முகவரி,பரிந்துரைத்த ஆசிரியரின் முகவரி,இலக்கிய வாழ்வுப்பணி பற்றிய குறிப்பு,நூற்பெயர்,நூற்சிறப்பு,இலக்கிய உலகில் நூலின் தகவு,பிற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாயின் அதன் விவரம்,ஆசிரியரின் பிறநால்கள் முதலிய சிறப்புச்செய்திகளைக் குறிப்பிட்டுப் பரிந்துரைக்கலாம்.# பரிந்துரை அனுப்பும் நிறை நாள் : 17.9.2008. எனவே நண்பர்கள் அனைவருக்கும் இத்தகவலை பரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

3 comments:

கோவை விஜய் said...

இராசராசன் பரிசு - 2008 விருதுத்தொகை :ஒரு இலட்சத்து ஒரு ரூபாய் மற்றும் சான்றிதழ்.# புதினம்,கவிதை,நாடகம்,கலையழகு மிளிரும் உரைநடை ஆகியன பரிசுக்குரியன. #01.07.2007 முதல் 30.06.2008 நாளுக்கு முன் வெளியீடானவை.#நூலின் ஆசிரியர் எந்நாட்டவராகவும் அமையலாம்.#எவர் வேண்டுமானாலும்,குறித்த பரிந்துரைப்படிவங்களில் தங்கள் முன்மொழிவை அனுப்பிவைக்கலாம்//


நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

யோசிப்பவன் said...

நல்ல தகவல்

வேளராசி said...

நன்றி கோவை விஜய் மற்றும் யோசிப்பவன் அவர்களே.