Thursday, March 20, 2008

கண்தானம் - புதியஅடித்தளம்

சமுதாயம் எனும் லேபிளில் கண்தானம் பதியபார்வை எனும் பதிவில் நடைமுறை ஆலோசனை ஒன்றை சொல்லியிருந்தேன்.காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அரசு இப்பொழுது ஒரு திட்டத்தை அமல்படுத்த எண்ணியுள்ளது.


அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மரணம் அடைந்தாலோ,அல்லது மூளை செயல்பாடுகள் முற்றிலும் செயல் இழந்தாலோ யாருடைய ஒப்புதலையும் பெறத்தேவையின்றி அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றுவதற்கு ( பிற நோயாளிகளுக்கு பொருத்த)டாக்டர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு உத்தேசித்துள்ளது.


இத்திட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் ஏற்படும் என்பதால் முதல்கட்டமாக, மரணமடையும் அல்லது மூளை செயல்பாடுகளை இழப்போரின் கண்களை பிறருக்கு பொருத்துவதை கட்டாயமாக்க உள்ளனர்.


ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இரண்டுலட்சம் பேரின் கண்தானம் தேவைப்படுகிறது.ஆனால் 15 ஆயிரம் பேர்தான் கண்தானம் செய்கின்றனர்.


எனவே இந்த திட்டம் மத, இன,ரீதியிலான உணர்வுகளை தாண்டி முனைந்து நிறைவேற்றப்பட்டால் ஒளிமயமான பாரதம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.