நாட்டில் கலவரம் நடந்துகொண்டிருக்கும் இந்தவேளையில் நாம் குழந்தைகள் மூலம் பாடம் கற்றுக்கொள்வோமாக.
Tuesday, July 29, 2008
பாடம் கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்
Friday, July 11, 2008
கற்கை நன்றே கற்கை நன்றே
கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி திரு.லோகநாதன்.இவர் காலையில் இருந்து மதியம் 1 மணி வரை ஒரு பட்டறையில் வெல்டிங் மற்றும் கேஸ்கட்டிங் வேலைகளை செய்கிறார்.பின்பு மதியஉணவு நேரமான 1 மணி முதல் 2 மணி வரைஉள்ள நேரத்தில் 15 நிமிடத்தில் உணவு அருந்திவிட்டு மீதமுள்ள 45 நிமிடங்களில் அருகிலுள்ள வீடுகள்,நிறுவனங்களில் கழிவறை சுத்தம் செய்யும் வேலையை செய்கிறார்.அதன்பின் மதியம் 2 மணிமுதல் 6 மணிவரை வெல்டிங் வேலையை முடித்தபின் மாலை 6 மணிக்கு மேல் பல வீடுகளுக்கு சென்று கழிவறையை சுத்தம் செய்கிறார்.வெல்டிங்வேலையில் மாதம் ஆறாயிரம் வரை சம்பளம் வாங்கும் இவர் அதனை குடும்பத்திற்க்கு கொடுத்துவிட்டு கழிவரையை சுத்தம் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தை சேமித்துவைக்கிறார்.
சமீபத்தில் இவர் தனது சேமிப்பில் இருந்த பணம் ரூபாய் ஐந்தாயிரத்தை பெற்றோரை இழந்து அரசு காப்பகத்தில் தங்கிப்படிக்கும் ஆதரவற்ற மாணவியர்க்கு புத்தகங்கள் வாங்க உதவியிருக்கிறார்.
இவரை பற்றிக் கேள்விப்பட்டதும் ஞாபகம் வந்த பாடல்
ஈன்று புறம்தருதல் என்தலைக்கடனே அவனை
சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே
இவர் தந்தையுமானவர்
Thursday, July 10, 2008
கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு
திரு.மஞ்சூர் ராசா அவர்களது முயற்சியால் கோவையில் வலைபதிவர் சந்திப்பு வரும் ஜூலை 13ஆம்தேதி ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.வரும் அன்பர்களது எண்ணிக்கையை பொருத்து இடத்தை முடிவுசெய்யலாம் எண்ணியுள்ளனர்.எனவே கோவையை சுற்றியுள்ள அன்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு
திரு.மஞ்சூர்ராசா 94424 61246
திரு.ஓசைசெல்லா 99946 22423
திரு.சஞ்சய் 98428 77208