Wednesday, April 23, 2008

இதய நோய்க்கு தமிழர்களின் மருந்து

இதய நோயினாலும் மாரடைப்பு ஏற்பட்டு ரத்தம் திடீர் என்று உறைவதாலும் பலர் திடீர் என மரணத்தை தழுவுகிறார்கள்.இந்த விபரீதத்தை தடுக்கும் அதிஅற்புத மருந்து ஹெபாரின் என்பது.இந்த மருந்து உயர்ரக விலங்குகளின் சிறுகுடல்,நுரையீரலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இதன்மூலம் கிடைக்கும் மருந்தின் அளவு மிகக்குறைவானது என்பதால் அதன்விலையும் மிக அதிகமாகவே உள்ளது. 1 மில்லிகிராம் ஹெபாரின் விலை ரூ 7,600 ல் இருந்து 33 ஆயிரம் வரை தரத்துக்கு ஏற்ப உள்ளது.


ஒரு கிராம் தங்கத்தின் விலைகூட ரூபாய் 1,100 தான்.ஆனால் ஒரு கிராம் ஹெபாரின் விலை உத்தேசமாக இரண்டரைலட்சம் ஆகும்.


மனிதனின் மகத்தான உயிரை மாரடைப்பு காலங்களில் காப்பாற்றக்கூடிய இந்த மருந்தை அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்உயிரியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 10 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்து கடற்கரையில் கிடைக்கும் சிப்பிகளில் இருந்து தயாரிக்கமுடியும் என கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


திறந்த இருதய அறுவைசிகிச்சை,இதய வால்வு மாற்று சிகிச்சை மற்றும் மாரடைப்பு காலங்களில் ரத்தம் உறையாமல் இருக்கவும் ஹெபாரினை பயன்படுத்தி வருகிறார்கள்.நமது விஞ்ஞானிகள் இந்த புதிய மருந்தை ஆட்டின் ரத்தத்திலும்,மனித ரத்தத்திலும் செலுத்தி பரிசோதித்து பார்த்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.


உலக அளவில் ஹெபாரினை உற்பத்திசெய்யும் இத்தாலியை சேர்ந்த ஓபாக்ரின் என்ற மருந்து நிறுவனத்திற்கே அனுப்பி தரத்தினை உறுதி செய்திருக்கிறார்கள்.


உலக சுகாதார நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் உலகில்உள்ள இதய நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பர் எனக்கூறியுள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை.


மீனவப்பொருளாதாரம் : இதுவரை உணவிற்காகவும், இறால் பண்ணைகளில் இறால் உணவிற்காகவும் பயன்பட்ட சிப்பிகள் வணிகரீதியாக பயன்படும்பொழுது மீனவர்களின் பொருளாதார நிலை மேம்படும் என்பது கண்கூடு.


இவர்கள் கண்டுபிடித்த மருந்தினில் செல்களின் பெருக்கத்தை குறைக்கும் பண்பு இருப்பதால் பற்றுநோய் மற்றும் H I V க்கு மருந்தாக பயன்படுத்த முடியுமா ? என ஆராய்ச்சி செய்ய உள்ளார்கள்.இவர்களது முயற்சி வெற்றி அடைய வாழ்த்துவோமாக.

Sunday, April 20, 2008

முதல் இந்தியர் - மதுரைக்காரர்

முதல் இந்தியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? என்ற கேள்விகளுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்,மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து விடை தேடும் முயற்சியில் இறங்கின.இந்தியாவில் மனிதர்கள் இடம்பெயர்ந்தது 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது.அப்படி இடம் பெயர்ந்தவர்கள் M130 என்ற மரபணுக்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர்களது ஆராய்ச்சியில் மதுரையில் இருந்து 50 கி.மி.தொலைவில் மேற்க்குதொடர்ச்சி மலைப்புகுதியில் அமைந்துள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறியகிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள 13 பேரின் D N A க்களை பரிசோதனை செய்துபார்த்ததில் அவர்கள் M 130 என்ற மரபணுக்கள் உடையவர்களாய் இருப்பதை வைத்து அவர்களின் மூதாதையர்களே முதல்இந்தியர்களாக இருக்கக்கூடும் என கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் M 130 என்ற மரபணுவை விட பழமையான மரபணுவை கொண்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.எனவே இந்த மரபணுவை கொண்டவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் தெற்காசியாவில் இருந்துதான் உலகின் மற்ற பகுதிகளுக்கு மக்கள் குடியேற்றம் நடந்தது என ஏற்கனவே மரபியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 16, 2008

யோகாசன ஆசிரியர் பயிற்சி

மதம் சார்ந்த விஷயம் அல்ல,உடல் நலன் சம்பந்தப்பட்டது என்பதால் இப்பொழுது யோகாசனபயிற்சிக்கு நல்ல வரவேற்பிருக்கிறது.
சுவாமி சச்சிதானந்தா அவர்களால் நிறுவப்பட்ட இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட் கோவையில் யோகாசன ஆசிரியர் பயிற்சி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
ஒருமாத பயிற்சி முகாமில் ஆசனம்,மூச்சுபயிற்சி,உடலை ஓய்வாக வைத்திருக்கும் முறைகள்,உடற்கூறு பற்றிய விளக்கங்கள்,உளவியல் என பல்வேறு விஷயங்களை போதிக்கின்றனர்.
இந்த பயிற்சிக்குபின் அவர்களுக்கு கல்வி நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,உடற்பயிற்சிகூடங்கள்,கார்பரேட் கம்பெனிகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
எனவே எந்த ஒரு சமயத்தை சார்ந்தவராக இருப்பினும் தயக்கமின்றி இதனை கற்று பயன்பெறலாம்.மேலும்அறிய 0422- 2556770 , 2542651 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, April 15, 2008

உலக புத்தக தினம்

வரும் ஏப்ரல் 23 ந்தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடுகிறார்கள்.ஷேக்ஸ்பியர் மற்றும் டான் க்விக் ஷாட் பிறந்ததினமான அன்று புத்தகங்களை வாங்கி நம்அறிவை விசாலமாக்குவதுடன் எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் கௌரவிப்போமாக

Saturday, April 12, 2008

தமிழ் புத்தாண்டு

காலை மிதித்தால் : எக்ஸ்கியூஸ் மீ

கையில் கொடுத்தால் : தேங்க்ஸ்

ஊட்டி விட்டால் : மம்மி

கூட்டிப்போனால் : டாடி

புத்தகம் பிரித்தால் : சேஸ்

கும்பிடப்போனால் : நமஹ

பல்லை இளித்தால் : லவ்

பாட்டி செத்தால் : டெத்

அட மறந்தே போச்சு ( தமிழரென்பது)

நாளை சித்திரை பர்ஸ்ட்டாம்

WISH YOU A HAPPY TAMIL NEW YEAR

( நன்றி திரு.பாமரன் )