Tuesday, December 9, 2008

கல்வி உதவி

இனிய தோழர்/தோழிகளே,

"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை"

என்பதற்க்கு இலக்கணம் போல நண்பர் ஆனந்த் பொன்னுசாமி உள்ளார்.

இவர் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்திவரும் DRCET அமைப்பு, ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி புரிந்து வருகிறது.





இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்


உலகத்திலேயே சிறந்த புண்ணியம் இது என்கிறார் பாரதியார்.

உங்களால் முடிந்த பங்களிப்பை தாருங்கள்.


நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப் பெருந் தொழில் நாட்டுவம் நாரீர்!

Contact:
P.Ananth Prasath - Email : ananthprasath@drcet.org Phone : +91-97313 22008
M.Krishna Priya - Email :
priyarajeswari@gmail.com Phone: +91-98809 60332
http://www.drcet.org/
நன்றி திரு.சதீஸ் அவர்களுக்கு.